நாக்பூர்: பிரம்ம குமாரிகள் விஸ்வ சாந்தி சரோவரின் 7-வது நிறுவன தினம் நேற்று நாக்பூரில் நடைபெற்றது.
இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று, “உலகில் சிலர் இந்தியா வலுவடைந்தால் தங்களுக்கு என்ன நடக்கும், தங்கள் நிலைக்கு என்ன நடக்கும் என்று பயப்படுகிறார்கள்.

அதனால்தான் இந்தியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் எதுவும் செய்யவில்லை.
7 கடல்களுக்கு அப்பால் இருந்தும் எந்த தொடர்பும் இல்லாதபோது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?” என்று அவர் கூறினார்.