மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வாழ்த்துக்களுடன் கூடிய வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது:-
இன்று 145 கோடி இந்தியர்களுக்கும் கொண்டாட்ட நாள். நமது மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அன்பான பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள். இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக சமூகத்தின் சார்பாகவும், ரிலையன்ஸ் குடும்பத்தினரின் சார்பாகவும், அம்பானி குடும்பத்தினரின் சார்பாகவும், பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் அமிர்தப் பண்டிகையின் போது மோடியின் அமிர்த மஹோத்சவ் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. சுதந்திர இந்தியா 100 ஆண்டுகளை அடையும் வரை மோடி தொடர்ந்து இந்தியாவுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். நமது தாய்நாட்டை பூமியில் சிறந்த தேசமாக மாற்ற, எல்லாம் வல்ல கடவுள் மோடியை ஒரு அவதாரமாக அனுப்பியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அவரை நெருக்கமாக அறிவேன். அது எனது அதிர்ஷ்டம்.
இந்தியா மற்றும் இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக இவ்வளவு அயராது உழைக்கும் ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. முதலில் அவர் குஜராத்தை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றினார். இப்போது அவர் முழு இந்தியாவையும் ஒரு உலகளாவிய சக்தியாக மாற்ற முயற்சிக்கிறார். நமது பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் எனது 140 கோடி இந்தியர்களுடன் நானும் இணைகிறேன். அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.