வாஷிங்டன் நகரில் அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில அமெரிக்காவை நாடி செல்கின்றனர். கடந்த மாதம் விசா நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் படி, மாணவர்கள் தங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதள கணக்குகளின் விபரங்களை விண்ணப்பத்தில் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். அமெரிக்க அதிகாரிகள் அந்த கணக்குகளின் பதிவுகளை ஆய்வு செய்வார்கள் என்றும், அவர்களின் செயல்பாடுகள் அமெரிக்க அரசுக்கும் மக்களுக்கும் எதிரானவையா என்பதை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யும் தனிநபர் சுதந்திரம் குறித்து கேள்விகள் எழுகின்றன. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்குகின்றனர். இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உயர் கல்வி கனவு கொண்ட பலர் இந்த புதிய நடைமுறையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பத் துறைகளில் உலகமெங்கும் மாணவர்கள் உழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் இப்போது சமூக வலைதள கணக்குகளும் அவசியமாகி விட்டன என்பதால், இந்த புதிய கட்டுப்பாடு விவாதத்திற்கு இடமளிக்கிறது.