சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்ட விரோத மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய கடுமையான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் பேசிய பாஜக உறுப்பினர் அஜய் சந்திரகர், “சுகாதாரம், கல்வி, சமூகப் பணி போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அப்பாவிகள், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் விஜய் ஷர்மா, “அரசு அமைப்புகளின் மீதான கட்டுப்பாடுகள் இல்லாததால் மாநிலத்தில் மதமாற்றங்கள் அதிகரித்து வருவதாக சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம் 1968-ன் கீழ் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் சர்மா, “சத்தீஸ்கரில் அரசு சாரா நிறுவனங்கள் தொடர்பான தணிக்கைகள் சரியாக நடைபெறவில்லை என புகார் வந்தால், சட்ட விரோதமாக மதமாற்றம் நடைபெறாமல் இருக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம்” என்றார்.