மும்பை: அக்டோபர் 4 முதல் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலைகளை பணமாக்க புதிய வழிமுறையை செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இப்போது, காசோலைகளை ஸ்கேன் செய்து வழங்கினால், காசோலை பணமாக்க குறைந்தது 2 நாட்கள் ஆகும். ஆனால் அக்டோபர் 4 முதல், காசோலை சில மணி நேரங்களுக்குள் வரவு வைக்கப்படும்.

காலை 10 மணிக்குப் பிறகு வழங்கப்படும் காசோலைகளை பெறும் வங்கி நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.