பாகிஸ்தானின் மீது இந்தியா கடும் தாக்குதல் நடத்திய நிலையில், இன்னும் ஒரு முக்கிய பணியை இந்தியா முடிக்கவேண்டும். இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ மற்றும் தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்திய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணை உட்பட பல முக்கிய தளவாடங்கள் அழிக்கப்பட்டன. பாக் விமான தளங்கள் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு மையங்கள் தாக்கப்பட்டன. ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா உள்ளிட்ட முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

இத்துடன் இந்தியா 9 முக்கிய பயங்கரவாத தளங்களை அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஆனால் இன்னும் பஹல்காமில் தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை.
இவர்கள் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். சுற்றுலாப் பயணிகளை இலக்காக்கி அவர்கள் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். இந்தியா இவற்றைக் கண்காணித்து வருகிறது. இந்த நால்வரையும் பிடிப்பது இந்தியாவின் மீதமுள்ள டாஸ்க்.இந்த தாக்குதலின் மூலம் இந்தியா தனது ராணுவ சக்தியை உறுதியாக நிரூபித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் தீவிரவாதிகளை பிடிக்கவேண்டிய நடவடிக்கைகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.