திருமலை: திருப்பதி மாவட்டம் திருமலையில் அன்னமய்யா விருந்தினர் மாளிகை உள்ளது. அதன் அருகே நேற்று மதியம் வனப்பகுதியிலிருந்து தடுப்பு வேலியை ஒரு சிறுத்தை தாண்டிச் சென்றது. திடீரென சிறுத்தை தோன்றியதால் அங்குள்ள பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சைரன்களை ஒலிக்கச் செய்து சிறுத்தையை மீண்டும் காட்டுப் பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து, விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள், திருமலையைச் சுற்றியுள்ள வனப்பகுதிக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு பக்தர்களை எச்சரித்தனர்.
திருமலையில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.