திருமலை: இது தொடர்பாக, கோயில் அதிகாரிகள் கூறுகையில், ‘இதுவரை, அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் தற்போது, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இந்த விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, பக்தர்கள், தங்கள் குழந்தைகள் உட்பட, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அலிபிரி வழியாக திருமலைக்குச் செல்ல முடியும்.

ஆனால் மதியம் 2 மணிக்குப் பிறகு, 70 முதல் 100 பக்தர்கள் குழுவாக மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். அதே நேரத்தில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இரவு 9.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் மலைப்பாதையில் நடக்க அனுமதிக்கப்படவில்லை’ என்றனர்.
திருப்பதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறை ஊழியர்களுக்கு ஸ்மார்ட் ஸ்டிக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. விலங்குகள் தாக்க முயன்றால், மின்சார அதிர்ச்சி கொடுத்து அவற்றை பயமுறுத்தும் வசதியும் இதில் உள்ளது.