டெல்லி: உலகின் மிக உயரமான ரயில் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்.

இந்த ரயில் பாலம் 359 மீட்டர் உயரத்திலும், செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்திலும் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்த ரயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கும். பிரதமர் மோடி நாளை கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையே 2 வந்தே பாரத் ரயில்களையும் தொடங்கி வைக்கிறார்.