டெல்லி: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஊழியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பதிவாளர்கள், மூத்த தனிநபர் உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள், சேம்பர் உதவியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணி வாரியான இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதற்கான கொள்கை வரையறுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைகளில், 15 சதவீத பதவிகள் பட்டியல் சாதியினருக்கும், 7.5 சதவீத பதவிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நேரடி ஆட்சேர்ப்பு இடஒதுக்கீடு விதிகளின்படி இந்த இடஒதுக்கீடு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுவே முதல் முறை, உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு இதுபோன்ற இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 23, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இது உச்ச நீதிமன்றத்தின் உள் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. உச்ச நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், நீதிபதிகள் உட்பட யாருக்கும் இடஒதுக்கீடு இல்லை. இதன் காரணமாக, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நீதித்துறையில் உரிய அந்தஸ்து கிடைக்காது என்ற ஒரு கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, இப்போது இந்த இடஒதுக்கீடு முறை அந்த விமர்சனத்தை உடைக்கும்.