புது டெல்லி: தொலைத்தொடர்புத் துறை (DoT) ஜனவரி 17 அன்று சஞ்சார் சாத்தி என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இது ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது. பயனர்கள் தங்கள் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி பதிவுகளிலிருந்து சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செயல்பாடுகளை நேரடியாகப் புகாரளிக்க இந்த ஆப் உதவுகிறது.
தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்காணித்து மீட்டெடுக்க அல்லது முடக்கவும் இது உதவுகிறது. தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த ஆப் 1 கோடிக்கும் மேற்பட்ட காணாமல் போன மொபைல் போன் இணைப்புகளைத் துண்டித்துள்ளது.

இது 29 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன் இணைப்புகளையும் செயலிழக்கச் செய்துள்ளது. இந்த ஆப் 5.35 லட்சத்திற்கும் மேற்பட்ட திருடப்பட்ட மொபைல் போன்களை மீட்டெடுக்க உதவியுள்ளது.
இந்த செயலியை இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சஞ்சார் சாத்தி வலைத்தளத்தை இதுவரை 16.7 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.