திரிபுராவின் செபஹிஜலா மாவட்டத்தில் உள்ள பிஷால்கர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்காக சுயஉதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 15 முதல் 20 பெண்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கடனை உடனடியாக திருப்பி செலுத்துமாறு கூறினர்.

தற்போது தன்னிடம் பணம் இல்லை என கடன் வாங்கிய பெண் கூறியுள்ளார். இதனால், சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், அவரை தாக்கி, வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, பாதி மொட்டையடித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிஷால்கர் மகளிர் காவல் நிலையம் தானாக வழக்கு பதிவு செய்தது. பிஷால்கர் மகளிர் காவல் நிலையத்தில் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த 20 பெண்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.