புது டெல்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளி முதல்வர்களுக்கு சிபிஎஸ்இ அனுப்பிய கடிதத்தில், ‘கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு நோய் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இந்த ஆபத்தான போக்குக்கு முக்கிய காரணம்.
எனவே, அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்க, அதைப் பற்றிய தகவல்களைக் கொண்ட ‘சர்க்கரை விழிப்புணர்வு பலகைகள்’ பள்ளிகளில் நிறுவப்பட வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை உட்கொள்ளல், பொதுவாக உட்கொள்ளும் உணவுகளில் சர்க்கரையின் அளவு, அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் ஆரோக்கியமான உணவு பற்றிய அத்தியாவசிய தகவல்களை இந்த பலகைகள் வழங்க வேண்டும்.’