முகலாய கால கட்டடக்கலைவின் அதிசயமாக விளங்கும் தாஜ்மஹால், 17ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. இது உலகின் மிக அழகான கட்டடங்களில் ஒன்றாகவும், 7 உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. சமீபத்தில் மத்திய அரசு பகிர்ந்து கொண்ட தகவலின்படி, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) பாதுகாப்பில் உள்ள நினைவுச் சின்னங்களில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், 2020 முதல் 2024 வரை அதிக வருமானம் ஈட்டியதாக கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, தாஜ்மஹால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், அதிக லாபம் ஈட்டும் இடமாகவும் திகழ்கிறது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த தகவலை சமீபத்தில் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது பகிர்ந்துள்ளார்.
தவிர, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) மேற்கொண்ட டிக்கெட் விற்பனையின் அடிப்படையில் தாஜ்மஹால் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினார் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன. 2020-21ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் மற்றும் கோனார்க் சூரிய கோயில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன.
இந்த தரவுகளின்படி, 2023-24ஆம் நிதியாண்டில், டெல்லியின் குதுப் மினர் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன. 50 ஆண்டுகளாக உலகளாவிய புகழ்பெற்ற இந்த தலத்திற்கு பல சுற்றுலாப் பயணிகள் வந்துவருகிறார்கள், அதனால் இந்த வருமானம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களிலும், ASI அடிப்படை வசதிகளை வழங்கி வருகிறது. இதில் கழிப்பறைகள், குடிநீர், நடைபாதைகள், பெஞ்சுகள், சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகள், கலாச்சார அறிவிப்பு பலகைகள், அறிவிப்பு பலகைகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் அடங்குகின்றன.
இதனால், தாஜ்மஹால் உள்ளிட்ட மற்ற சுற்றுலா தலங்கள், இந்தியா மற்றும் உலகளவில் சுற்றுலா வருமானத்தை அதிகரிக்கும் முக்கிய இடங்களாக திகழ்கின்றன.