மும்பை: நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று ஓய்வு பெற்ற நீதிபதி பூசன் ராமகிருஷ்ண கவாய் தெரிவித்தார்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13 அன்று நிறைவடைந்ததை அடுத்து, தனது பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு பாராட்டு விழாவையும், மாநில வழக்குரைஞர்களின் கருத்தரங்கையும் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் மும்பையில் நடத்தியது.
இதில் பங்கேற்று பேசிய, நீதிபதி பி.ஆர்.கவாய், “ நாடு வலுப்பட்டுள்ளது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்வானது.
அதன் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். நாட்டின் அடித்தளம் வலுவாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களும் சரிசமமானவை. அவை மூன்றும் பரஸ்பரம் மரியாதை அளித்துச் செயல்பட வேண்டும்.” என்றார்.
இந்நிலையில், தன்னை வரவேற்க மாநில தலைமை செயலாளர், காவல்துறை ஆணையர் ஆகியோர் வரவில்லை என நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் தெரிவித்திருந்தார்.