சுல்தான்பூர்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக உ.பி., மாநிலம் சுல்தான்பூரில் பாஜக தொண்டர் ஒருவர் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி டிசம்பர் 2023-ல் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். பிப்ரவரி 2024-ல் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் புகார்தாரரின் குறுக்கு விசாரணை பிப்ரவரி 11-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து வழக்கு பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரின் வழக்கறிஞர் சந்தோஷ்குமார் பாண்டே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.