மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா எம்.பி. – எம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 26-ம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு ராகுல் காந்தி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜக தலைவராக முடியும் என்று ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் பிரதாப் கட்டியார் தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்தது. பல முறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்த வழக்கில் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.

இந்த சூழ்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சாய்பாபா நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. மேலும், நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 26-ம் தேதி ராகுல் காந்தி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.