பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13-ம் தேதி மகாகும்பமேளா தொடங்கியது. சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் பிரயாக்ராஜுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், மகாகும்பமேளா இன்று தொடங்க உள்ளதால், பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக உத்தரபிரதேச அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. நேற்று மாலை 4 மணி முதல் மகாகும்பமேளா பகுதியும், மாலை 6 மணி முதல் பிரயாக்ராஜ் பகுதியும் வாகனங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புனித நீராட வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மகாகும்பமேளாவில் நேற்று வரை 63 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகாகும்பமேளா இன்று மகா சிவராத்திரியுடன் நிறைவடைவதால், பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.