புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட்டை உருவாக்கும் பணி சீராக நடந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரம் மற்றும் அதிகபட்சமாக 1000 டன் தூக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள ஏவுதளங்களில் இதுபோன்ற ராக்கெட்டுகளை ஏவ முடியாது. எனவே, மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.3984.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் 4 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.