பாட்னா: பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ நிகழ்வில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பீகாரில் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் மோசமடைந்துள்ளது. ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதியின் பூமியாகக் கருதப்பட்ட பீகார், இப்போது இந்தியாவின் குற்றத் தலைநகராக மாறிவிட்டது. அரசியலமைப்பைக் காப்பாற்றவும், நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நான் போராடுகிறேன்.
எதிர்காலத்தில் நாம் எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பீகாரில் இருந்து தொடங்கும். சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான படிவங்கள் மிகவும் முக்கியம். பல்வேறு கேள்விகளைக் கொண்ட படிவம் எவ்வாறு தயாரிக்கப்படும் என்பது குறித்து இப்போது கவலை எழுந்துள்ளது. ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காமல் படிவங்கள் இறுதி செய்யப்படும் என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது.

அது நடந்தால், அது சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்குமா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் “நரேந்திர மோடி டிரம்பிடமிருந்து அழைப்பு வந்த பிறகு சரணடைந்தார். “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் குறைந்தது 11 முறை வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனால் பிரதமர் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார். இதைப் பற்றி அவரால் எதுவும் சொல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.