
நேற்று முன்தினம் கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குளிர்கால சார்தாம் யாத்திரை குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த முறை குளிர்கால யாத்திரையை தொடங்கியுள்ளோம். இதற்கான திட்டங்களும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ருத்ரபிரயாக்கில் தங்கி அனைத்து மக்களையும் சந்திப்பேன். இங்கு மேற்கொள்ளப்படும் குளிர்கால யாத்திரை, வரும் ஆண்டுகளில் உத்தரகாண்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுவாக சார்தாம் யாத்திரை 5 முதல் 6 மாதங்கள் வரை நடைபெறும். அதற்குப் பிறகும் உத்தரகாண்டிற்கு மக்கள் வரக்கூடிய பல இடங்கள் உள்ளன.
இங்கு புனித யாத்திரைக்கு வருபவர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்கக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது, மேலும் மக்கள் ஆண்டு முழுவதும் உத்தரகாண்ட் வந்து அதன் அழகையும் காலநிலையையும் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறினார்.