வீட்டில் வளரும் கற்றாழையைக் கொண்டு உங்கள் சருமத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அவற்றில் சில குறிப்புகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
உடல் பருமன், வயது போன்ற பல காரணங்களால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இதை சரிசெய்ய கற்றாழை பயன்படுத்தலாம். கற்றாழையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து அரைத்து சருமத்தில் பூசவும். மூன்று வாரங்கள் தொடர்ந்து இதை பூசி வர, சுருக்கம் நீங்கும்.
கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும்.
கற்றாழையை பருக்களை நீக்க பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.