இன்று பெரும்பாலான பெண்கள் ‘கிளீன் ஷேவ்’ முகத்தைவிட, தாடியுடன் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இதனால் பல ஆண்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பது மட்டுமல்ல, அதை நன்றாக பராமரிப்பதும் முக்கியம். சரியான பராமரிப்பு இல்லாமல் தாடி பரிதாபமாக மாறக்கூடும். அதனால், தாடி பராமரிப்பதற்கான சில எளிய வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.

முதலில், தாடி வளர்க்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், முதல் ஒரு வாரம் தினமும் கிளீன் ஷேவ் செய்ய வேண்டும். இதனால் தாடி ஒத்த முறையில் வளர உதவும். அதன்பின், தாடி வளர்ச்சிக்கு பராமரிப்பும் மிகவும் முக்கியம். ஒழுங்காக டிரிம் செய்யாமல் விட்டுவிட்டால், தாடி அசிங்கமாகவும் சீரற்றதாகவும் தெரியும்.
அழகான மற்றும் மென்மையான தாடிக்காக, வாரத்தில் இருமுறை தாடிக்கு ஷாம்பு போடுவது நல்லது. தாடிக்கென தனித்த ஷாம்புகள் கிடைக்கும், அவற்றை பயன்படுத்தலாம். ஷாம்பு பயன்படுத்திய பிறகு, கண்டிஷனர் தேவை. இது தாடி முடியை மென்மையாக்கும். தாடி சுத்தம் செய்யும்போது நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவுங்கள், இல்லையெனில் வேதிப்பொருட்கள் தாடியில் சிக்கி விடும்.
தாடிக்கு தனியான சீப்பும் வைத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்த வேண்டாம், குறிப்பாக பொடுகு உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயை தாடிக்குப் போடுவது மிகவும் பயனுள்ளது. இது தாடியின் வேர்களை பலப்படுத்தும், மேலும் தாடியின் நிறம் மாறுவதையும் தடுக்கும்.