தற்போதைய காலக்கட்டத்தில் சிலருக்கு கர்ப்பம் தரிப்பது எளிதாக இருக்கும் போதிலும், இன்னும் பலர் வயிற்றில் ஒரு குழந்தையை சுமக்கும் ஆசையோடு பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அந்த முயற்சிகளில் முக்கியமானதாகும் IVF சிகிச்சை. இந்த செய்முறை சிலருக்கு முதற்கட்டத்திலேயே வெற்றியை தரும். ஆனால் சிலருக்கு ஒரே சிகிச்சை பல முறை செய்தாலும் கூட எதிர்பார்த்த முடிவை தராமல் போகிறது.

இவ்வாறு IVF முறையில் பல முறை தோல்வியை சந்திக்கும் தம்பதிகள், மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சிலருக்கு IVF என்பது கடைசி நம்பிக்கையாகவே இருக்கிறது. எனவே, ஒரு தோல்வி கூட அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கும். இது போன்ற நேரங்களில் உணர்ச்சி ரீதியான ஆதரவும், நம்பிக்கையுடன் தொடரும் மனநிலையும் அவசியமாகிறது.
கர்ப்பகுடி IVF மையத்தின் நிபுணரான மருத்துவர் அனிதா ஏ. மனோஜ் கூறியதாவது, “தோல்வியின் காரணங்களை மருத்துவர்கள் தெளிவாக விளக்கும் போது, தம்பதிகள் அதை உணர்ந்து படிப்படியாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதன்பின், அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட முடிகிறது. இந்த Entire process-இல், குடும்ப ஆதரவும் மருத்துவ ஆலோசனையும் மிக முக்கியமானவை.”
தோல்விக்குப் பிறகு மருத்துவர்கள் மேற்கொள்ளும் முக்கியமான சோதனைகளில், கருப்பை (Endometrium) ஏற்பு பகுப்பாய்வு, கருவின் தரத்தை நிர்ணயிக்கும் மரபணு சோதனை, கருப்பை மற்றும் நுண்ணுயிரிகள் சோதனை போன்றவை அடங்கும். குறிப்பாக, ERA, EMMA, ALICE எனும் சோதனைகள் கருவை ஏற்றுக்கொள்ளும் சக்தி உள்ளதா என்பதை ஆராய்வதற்கு பயன்படுகின்றன.
மரபணு சிக்கல்கள் அல்லது குறைந்த விந்தணு மற்றும் கருமுட்டை தரம் போன்ற காரணங்களால் IVF தோல்வியடைந்தால், கருமுட்டை அல்லது விந்தணு நன்கொடையைக் கொண்டு மூன்றாம் தரப்பு இனப்பெருக்கம் செய்முறை பரிந்துரைக்கப்படும். மேலும், நோயாளியின் வயது 35க்கு மேல் என்றால், IVF சுழற்சிகளுக்கு இடையில் நீண்ட இடைவெளி பரிந்துரைக்கப்படாது. ஓர் இடைவெளியின் முக்கியத்துவம் என்னவென்றால், ஹார்மோன்கள் மீண்டும் சமநிலைக்கு வருவதற்கும் உடலை அடுத்த கட்டத்திற்கு தயார் செய்வதற்கும் இது உதவுகிறது.
தோல்வி எதிர்கொண்ட தம்பதிகள் மீண்டும் IVF சிகிச்சை முயற்சிக்க முன்வரும் முன்னேற்பாடுகளும் தேவையான ஆலோசனைகளும் மிக முக்கியமானவை. எப்போதும் ஒரு உண்மை மறக்கக்கூடாது – IVF வெற்றி விகிதம் 50-60% என்றாலும், ஒவ்வொருவருக்கும் அது ஒரே மாதிரியாக வேலை செய்யாது. அதற்காக நம்பிக்கையை இழக்காமல், மருத்துவரின் வழிகாட்டுதலுடன் படிப்படியாக செயல்படுவது முக்கியம்.
இதனாலேயே, தம்பதிகள் மனநிலையை சீராக வைத்துக்கொண்டு, எதிர்மறை முடிவுகளை உணர்வோடு ஏற்றுக்கொண்டு, மீண்டும் முயற்சி செய்யும் நேர்மறை எண்ணத்துடன் செயல்பட வேண்டும். உணர்ச்சிகள் மேலடையும் தருணங்களில், மனநலம் மற்றும் உளவியல் ஆலோசனை பெரிதும் உதவும். இது அவர்கள் மன உறுதியை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும் வழிவகுக்கும்.