விலைவாசி கடும் உயர்வில் உள்ள இன்றைய சூழலில் வீடு வாங்குவது ஒரு பெரிய சவால். பொதுவாக ஒரு வீடு வாங்குவது ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரிய நிகழ்வாக இருக்கிறது. ஆனால் சில சலுகைகளை சரியாக பயன்படுத்தினால் வீடு வாங்கும் போது பெரிய தொகையை சேமிக்க முடியும்.
பெண்கள் பெயரில் வீடு வாங்கினால் அரசு வழங்கும் சலுகைகள் மூலம் முத்திரை வரி குறைக்கலாம். இதனால் அதிக தொகையை மிச்சப்படுத்தலாம். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு 1 சதவீதம் வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

உதாரணமாக ஒரு வீடு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ளதாக இருந்தால் ஆண்கள் 6% முத்திரை வரி செலுத்த வேண்டும். அதே வீட்டை ஒரு பெண் வாங்கினால் 5% மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் நேரடியாக 50,000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இந்த சலுகையை பெற, வீடு முழுவதும் பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். சில மாநிலங்களில் கூட்டு உரிமையிலும் சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெண்களின் பெயரில் வீடு இருந்தால் வங்கிகளில் வீட்டு கடன்களும் குறைந்த வட்டியில் கிடைக்கும். மேலும் செயலாக்கக் கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சம்பள வருமானத்தின் அடிப்படையில் வரி நிவாரணம் பெறவும் இது உதவியாக இருக்கும். வீடு வாங்கும் முன் யாருடைய பெயரில் உரிமை வேண்டும் என்பதை திட்டமிட்டு தீர்மானிக்க வேண்டும்.
வீடு பதிவு செய்யும் போது தேவையான ஆவணங்களுடன் தள்ளுபடி சலுகைக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முறையை பயன்படுத்தினால் உங்கள் வீட்டு செலவில் பெரிய தொகையை சேமிக்க முடியும்.
சொந்த வீடு என்பது கனவாய் இருந்தாலும் இந்த சலுகைகளை பயன்படுத்துவது உங்கள் கனவை சுலபமாக நிறைவேற்றும் வழியாக அமையும்.