சென்னை: தமிழக பா.ஜ.க., சிறுபான்மை அணி சார்பில், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி, சென்னை, எழும்பூரில், நேற்று நடந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்எல்ஏ, பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு, தமாகா மாநில பொதுச்செயலாளர் முனவர் பாஷா, துணைத் தலைவர் விடியல் சேகர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தமமுக தலைவர் ஜான் பாண்டியன், தென்னிந்திய பார்வார்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி தங்கையா, நோன்பு திறப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி, செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து நான் எதுவும் கூறப் போவதில்லை. உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக சந்திக்கலாம். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை,” என்றார்.