மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:- எடப்பாடி பழனிசாமி தனது சொந்த நலனுக்காக அதிமுகவை பலவீனப்படுத்திவிட்டார் என டிடிவி.தினகரன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
உங்கள் கப்பலில் ஒரு துளை உள்ளது. உங்கள் கப்பல் எப்பொழுதும் மூழ்கலாம் என்பதை அறிந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் உங்களை விட்டு நீங்கி பிழைத்தால் போதும் என்று கூறி வருகின்றனர். அமமுக தொடங்கிய நாள் முதல் இன்று வரை காற்றில் கரையும் கற்பூரம் போல் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் மறைந்துவிடும். அதிமுகவினரை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். இப்படி பேசியிருக்கிறார்.