சென்னை: சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்றுவதே ஒரே நோக்கம். 2024-ல் பாஜக அமைத்த கூட்டணியில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் வந்தனர். தமிழகத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத கள சூழல் நிலவுகிறது.
எப்போதும் இருமுனைப் போட்டியாக இருக்கும் தமிழ்நாட்டில், மூன்றாவது அணி அல்லது நான்காவது அணி சாத்தியமா என்பது அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் தெரியும். எனவே, இன்று களத்தில் ஒற்றுமையாக இருந்து 2026 தேர்தலுக்கு எடுத்துச் செல்வது அனைவரின் கடமையாகும்.

கடந்த சில நாட்களாக கூட்டணியில் நடக்கும் நிகழ்வுகள் திருப்திகரமாக இல்லை. சலிப்பை ஏற்படுத்துகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் செல்லும் என்று நான் நம்புகிறேன்.
கூட்டணிக்கு ஒரு புதிய கட்சியை அழைப்பதை விட, ஏற்கனவே உள்ள கட்சியுடன் கூட்டணியை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதைப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.