மதுரை: இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:- செப்டம்பர் முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமி மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்த அவதாரமாக விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். மக்களே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கி மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேசலாம் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. தமிழக் வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் வழிகாட்டி யார் என்று தெரியவில்லை.

அண்ணாவும் எம்ஜிஆரும் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால், அண்ணா மற்றும் எம்ஜிஆரைப் பற்றி விஜய் பேசி வருகிறார். அதிமுகவை விமர்சிக்கும் விஜய்யின் கருத்துக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தவெக தலைவர் விஜய் ஒன்றரை வருடங்களாக கை குழந்தையாக இருக்கிறார். கட்சி தொடங்கியவுடன் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று நினைப்பது ஒரு கனவு என்றும் அவர் கூறினார்.