மேட்டூர் / தர்மபுரி: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 16,288 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று காலை வினாடிக்கு 15,040 கன அடியாகக் குறைந்தது.
டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,000 கன அடியில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

அணை நீர்மட்டம் நேற்று 119.02 அடியாகவும், நீர் இருப்பு 91.91 டிஎம்சியாகவும் இருந்தது. தரம்புரி மாவட்டம் ஹோகேனக்கல்லில் காவிரியில் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக பதிவான நீர் வரத்து மாலையில் 16 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
மேலும், நேற்று காலை நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாகவும், மதியம் ஒரு மணிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது.