சென்னை: சென்னை – கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 27 மின்சார ரயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்படும்.
விவரங்கள்: சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 8.05, 9.00, 9.30, 10.30 மற்றும் 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஜூலை 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். சென்ட்ரல் – சூலூர்பேட்டை இடையே காலை 5.40, காலை 8.35, காலை 10.15 மற்றும் மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டை – சென்ட்ரல் இடையே காலை 10.00, காலை 11.45, மதியம் 12.35 மற்றும் மதியம் 1.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படும்.

அதே நாட்களில் காலை 9.40 மணி முதல் மதியம் 12.40 மணி வரை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும். காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் சூலூர்பேட்டை – நெல்லூர் ரயில் மற்றும் காலை 10.20 மணிக்கு இயக்கப்படும் நெல்லூர் – சூலூர்பேட்டை ரயில் ரத்து செய்யப்படும். அதே நாட்களில் காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி – கடற்கரை மின்சார ரயில் ரத்து செய்யப்படும்.
அதே நாட்களில் காலை 9.10, காலை 9.55, காலை 11.25, மதியம் 12.00, மதியம் 1.00 மற்றும் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் ரயில்கள் ரத்து செய்யப்படும். விளம்பரம் இந்துதமிழ்26 ஜூன் அதே நாட்களில் அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ஆவடி – சென்ட்ரல் ரயில் ரத்து செய்யப்படும். செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டியில் இருந்து 15 மற்றும் 17-ம் தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் கடற்கரை மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும்.
அதே நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு கும்மிடிப்பூண்டி – தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்குப் பதிலாக, அதே நாட்களில் சென்னை சென்ட்ரல் மற்றும் பொன்னேரி மற்றும் எண்ணூர் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கூடுதலாக, சென்னை கடற்கரை மற்றும் மீஞ்சூர் இடையே ஒரு பயணிகள் சிறப்பு ரயிலும் இயக்கப்படும்.