
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ம் தேதி முதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் வரும் 10-ம் தேதியும், பரணி தீபமும், 13-ம் தேதி மகா தீபமும் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அவர்களுக்கு இடமளிக்கப்படும்.

இதன் காரணமாக 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 8 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.