குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் பசுமையாக காட்சியளிப்பதால் யானைகளுக்கு போதிய உணவு கிடைத்து வருகிறது. இதனால் சமவெளி பகுதியில் உள்ள யானைகள் மலைப்பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கெத்தை வனப்பகுதியை சேர்ந்த காட்டு யானைகள் கூட்டம் குன்னூர் அருகே உள்ள கொலகம்பை கிராமத்தில் முகாமிட்டுள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் இடம் மாறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை கொலகம்பை பகுதியில் உள்ள மேரக்காய் தோட்டத்துக்குள் புகுந்து மேரக்காய் கடைகள் மற்றும் மேரகங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குன்னூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர், நேற்று காலை கிராமத்திற்குள் நுழைய முயன்ற காட்டுயானை கூட்டத்தை கிராமத்துக்குள் நுழையவிடாமல் பட்டாசுகளை வெடித்தும், தீ வைத்தும் தடுத்தனர்.
மேலும், காட்டு யானைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால், அந்த பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.