சென்னை: இது தொடர்பாக, நேற்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு தமிழகத்திற்கான தொழில்துறை முதலீட்டை ஈர்க்க இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு செல்லும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 4 கட்டங்களாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இதன் மூலம் ரூ.18,498 கோடி முதலீடு செய்யப்படும் என்றும், ஸ்பெயின் தவிர பிற நாடுகளில் இருந்து மட்டும் முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். ஆனால், முதல்வர் வாக்குறுதியளித்தபடி எதுவும் நடக்கவில்லை. சமீபத்தில், துாத்துக்குடியில் நடைபெற்ற பிராந்திய முதலீட்டாளர்கள் மாநாடு உட்பட, கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதில் 10 சதவீதம் கூட தொழில்துறை திட்டங்களாக மாற்றப்படவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில், மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இருப்பினும், வெளிநாட்டு சுற்றுலாக்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு ரூ.18,498 கோடி மட்டுமே.
எனவே, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதலமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இந்த முதலீட்டில் எவ்வளவு தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.