சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆதவ் அர்ஜுனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டார். அதன்பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் தொலைபேசி மூலம் நடிகர் விஜயிடம் நேரடியாகப் பேசி வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கடுமையாக பணியாற்றி வருகிறார். தற்போது அந்த கட்சி தனியாக போட்டியிடும் நிலைமை உருவாகியுள்ளதால், வேட்பாளர் தேர்வு மற்றும் மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், மற்ற கட்சிகளிலிருந்து முக்கிய நிர்வாகிகளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் முயற்சியும் மேற்கொண்டு வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா, பேச்சாளர் ராஜ் மோகன் மற்றும் அதிமுகவிலிருந்து நிர்மல் குமார் ஆகியோர் இக்கட்சியில் இணைந்துவிட்டனர்.
கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில் ஆதவ் அர்ஜுனாவும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் புல்வெளியில் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் குறித்து பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், அதற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆதவ் அர்ஜுனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, “எனது தனிப்பட்ட உரையாடல் காணொளி பொதுவெளியில் வந்தது. நான் எப்போதும் ஜனநாயகத்திற்காக நம்பிக்கை கொண்டவன். தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் முரண்பாடுகளை நான் கடைப்பிடிக்கவில்லை. இந்த காணொளியில் வெளிப்பட்ட வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ குறித்து நடிகர் விஜய் கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிடும் முன்பே, விஜய் அவரை வற்புறுத்தி வருத்தத்தை வெளிப்படுத்தச் செய்ததாகவும், நேரடியாக எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த நிலைமைக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் உள்ளன.
மேலும், அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நடிகர் விஜயை குறித்து அவதூறாக பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அடுத்த தேர்தல் முன்பாக கடுமையான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.