சென்னை: ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக திருச்சி – திருவனந்தபுரம் இடையே ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:- ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன.
அதன்படி, எர்ணாகுளம் – கண்ணூர், திருச்சி – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – குருவாயூர் (பெட்டி எண்- 16305, 22627, 16342) இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 18ஆம் தேதி வரை கூடுதலாக 2ஆம் வகுப்பு பொதுப் பெட்டி சேர்க்கப்படுகிறது.
இதேபோல் கண்ணூர் – ஆலப்புழா, ஆலப்புழா – கண்ணூர், குருவாயூர் – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – திருச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் (16308, 16307, 16341, 22628) இன்று முதல் 19-ம் தேதி வரை கூடுதலாக 2-ம் வகுப்பு பொதுப் பெட்டி சேர்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.