சென்னை: தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வெப்பச் சலனம் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக வேலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, தஞ்சாவூர், சேலம், மதுரை, திருத்தணி, கோவை, திருப்பத்தூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதனிடையே பல பகுதிகளில் நல்ல மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. தற்போதும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோடை வெப்பத்தை தணிக்க மலைப்பாங்கான பகுதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். கோடைக்காலத்தில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர காலம், வெப்பம் அதிகமாக இருக்கும் காலம். இது கத்திரி வேல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
இந்த ஆண்டு, கத்திரி வெயில், மே 4-ம் தேதி துவங்கி, 28-ம் தேதி வரை, 25 நாட்களுக்கு நீடிக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் ஆங்காங்கே மழை ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைவதால் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மே 1-ம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.