சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று விசேஷ நாட்கள் மற்றும் சுப தினங்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் சற்று குறைந்தது.

அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ. 2,700-ல் இருந்து ரூ. 1,800-க்கும், ஐஸ் மல்லி ரூ. 2,500-ல் இருந்து ரூ. 1,500-க்கும், முல்லை ரூ. 900-க்கும், ஜாதி மல்லி ரூ. 700 -ல் இருந்து ரூ. 600-க்கும், கனகாம்பரம் ரூ. 1,000-ல் இருந்து ரூ. 800-க்கும், சாமந்திப்பூ ரூ. 100-ல் இருந்து ரூ. 80-க்கும், சம்பங்கி ரூ. 100-க்கும், அரளி ரூ. 400-ல் இருந்து ரூ. 200-க்கும், பனீர் ரூ. 120-ல் இருந்து ரூ. 100 ஆகவும், சாக்லேட் ரோஸ் விலை ரூ. 180 -ல் இருந்து ரூ. 120-க்கும் விற்பனையாகிறது.