ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால், யானைகள் உட்பட பல்வேறு விலங்குகள் பசுமையை தேடி அலைந்தன. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கும், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் நீடிக்கும்.
இந்த இரண்டு பருவமழைகளும் சரியான நேரத்தில் பெய்ததால், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகள் 6 மாதங்களுக்கும் மேலாக பசுமையாக காட்சியளிக்கிறது. ஆனால், கடந்த நவம்பர் மாதம் முதல் மழை குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், காடுகளில் பசுமை இல்லை. புற்கள் மற்றும் செடியின் தண்டுகள் காய்ந்துவிட்டன. மரங்களில் உள்ள இலைகள் கூட காய்ந்துவிட்டன. தற்போது வனப்பகுதிகள் வறண்டு கிடப்பதால், காட்டுத் தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

மேலும், ஊட்டி – மைசூர் தேசிய நெடுஞ்சாலை முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக செல்வதால், இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் மசினகுடியில் இருந்து முதுமலைக்கு சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதன் காரணமாக, இந்த சாலைகளில் எதிர்த்தடுப்புகளை பயன்படுத்தி வனப்பகுதிகளில் காட்டுத் தீயை தடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில், புல், செடிகள் காய்ந்து, காடுகள் பசுமையின்றி பழுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. மேலும், நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டுவிட்டன. இதனால் இங்குள்ள காட்டு யானைகள் போதிய பசுந்தீவனம் கிடைக்காமல் திணறி வருகின்றன. யானைகள் உள்ளிட்ட பெரும்பாலான வன விலங்குகள் பசுமையை தேடி நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.