சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் ஒருவரிடம் “சார்” என்று பேசியதாக தகவல் வெளியானதும், அந்த “சார்” யார் என்று எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகர் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர் யாரிடமோ பேசுவது போல் நடித்து, மறுமுனையில் யாரும் இல்லாத நிலையில், ‘சார்’ என தொலைபேசியில் அழைத்து அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது முதல் பைக்கில் புறப்படும் வரை அவரது மொபைல் போன் ‘பிளைட் மோடில்’ இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.