அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. சந்தை முழுவதும் 94 கழிப்பறைகள் உள்ளன. காய்கறி, பூ, பழ சந்தையில் 68 கழிப்பறைகள், 10 சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. உணவு தானிய சந்தையில் இலவச கழிப்பறை என 26 கழிப்பறைகள் உள்ளன. ஆனால், தனியார் ஒப்பந்ததாரர்கள் காய்கறி, பூ, பழ மார்க்கெட்டில் கழிப்பறைக்கு ரூ.10, ரூ.5 என வசூலிக்கின்றனர். இது தவிர குளிப்பதற்கு ரூ.30 வசூலிக்கின்றனர்.
கோயம்பேடு உணவு தானிய சந்தையில் மட்டும் இலவச கழிப்பறை உள்ளது. காய்கறி, பூ, பழ மார்க்கெட் வளாகங்களிலும் இலவச கழிப்பறைகள் செயல்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, இரண்டு மாதங்களுக்கு முன், பி.கே., சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான இதில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள 68 கழிப்பறைகள் இலவச கழிப்பறையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சந்தை வளாகத்தில் உள்ள கழிவறைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகளை விரைவில் வியாபாரிகளிடம் ஒப்படைத்து இலவசமாக பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கடை நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.