சென்னை: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூக்கள் பயன்களைப் பார்ப்போம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
முருங்கைப் பூ ; இதை உணவில் சேர்ப்பதால் கண்கள் குளிர்ச்சி அடையும். உடல் உறுப்புகள் சீராக வளர்ச்சி அடையும். அதிகமான பித்தத்தை ப் போக்கி, மூட்டு வலியைக் குறைக்கும். ஆண்மையைப் பெருக்கி , தாய்ப்பால் பெருகவும் துணைபுரிகிறது.
வெங்காயப் பூ ; குடல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. குன்ம நோய்களைப் போக்கும்.
வாழைப் பூ ; வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், இருமல், கை கால் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தருகிறது. பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான பாதிப்புகளைக் குறைக்கிறது. வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்துகிறது.
அகத்திப் பூ ; உடல் அழற்சியைப் போக்கி வெயிலினால் ஏற்படும் பித்தத்தைக் குறைக்கிறது.
தாமரைப் பூ ; தலை எரிச்சல், தலை சுற்றலை போக்கும். மன உளைச்சலைப் போக்கி மனஅமைதி தந்து நல்ல தூக்கத்தைத் தரும். இதயத்துக்கு வலுவூட்டி இதயம் நன்கு செயல்பட துணைபுரிகிறது.
வேப்பம் பூ ; தொடர் ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகளை அகற்றும். பித்தத்தை தணிக்கிறது. தலைமுடி சம்பந்தமான பாதிப்புகளைக் குறைக்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளை போக்குகிறது.
ஆவாரம் பூ ; இதை வதக்கி ஒரு மெல்லிய துணியில் வைத்து கட்டி கண்ணை சுற்றி ஒத்தடம் கொடுக்க, கட்டியினால் உண்டாகும் கண்நோய்களைப் போக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். உடல் எடைக் குறைக்க உதவி புரிகிறது. மேனி எழிலைப் பாதுகாத்து பளபளப்பைத் தருகிறது.
புளியம் பூ ; பித்தத்தை நீக்கும். நாவின் சுவையின்மை யைப் போக்கும். இரத்தசுத்திக்கு உதவியாக இருக்கும் .