சென்னை: இதுகுறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் த.பிரபு சங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்சாலை வளாகங்களில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.