சென்னை: செப்.13, 16 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை – தாம்பரம் வரை இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூர் – சென்னை கடற்கரையிலிருந்து செப் 13, 16 இரவு 9.35 மணிக்கும், சென்னை கடற்கரை – திருவள்ளூரில் இருந்து இரவு 7.50 மணிக்கும் அதே நாட்களில் புறப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கடலுார் – அரக்கோணம் மின்சார ரயில் செப்டம்பர் 14, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.05 மணிக்கும், கும்மிடிப்பூண்டி – கடலுார் மின்சார ரயில் செப்டம்பர் 13, 16 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கும், கடலுார் – கும்மிடிப்பூண்டி செப்டம்பர் 13, 16 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கும் புறப்படும்.
ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே செப்டம்பர் 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை – எழும்பூர் மார்க்கத்தில் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரையிலிருந்து செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 10.10, 11.00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் – கடற்கரையிலிருந்து பகுதியளவில் ரத்து செய்யப்படுகின்றன.
கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரையில் இருந்து செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் – கடற்கரை மார்க்கமாக ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூர்-சென்னை கடற்கரையில் இருந்து செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எழும்பூர்-சென்னை கடற்கரை பகுதியில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.