
சென்னை: ஃபென்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் ஒரு நாள் மூடப்படும். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபென்சல் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஃபென்சல் புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபென்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று ஒரு நாள் திரையரங்குகள் மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.