சென்னை: எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் எப்போது முடிவுக்கு வரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தனது கடமை முடிந்துவிட்டதாக கருதும் , நாடு முழுவதும் குடியரசு தினத்தை கொண்டாடும் நாளிலும் கண்ணீர் வடிக்கிறார்.
எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் உட்பட நீண்ட காலமாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என்றார்.