சென்னை: 2025-26 நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் சட்டமன்ற அறிவிப்பை செயல்படுத்துவதற்காக, மூத்த குடிமக்கள் அறுபடை முருகப்பெருமானின் புனிதத் தலங்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலைக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
ஆன்மீக யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், மேலும் அவர்கள் தாலுகா முதல்வரிடமிருந்து வருமானச் சான்றிதழைப் பெற்று இணைக்க வேண்டும்.

போதுமான உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும். ஆன்மீக யாத்திரைக்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெறலாம் அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.