விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “ராஜ்யசபா எம்.பி., சீட் காலியாகிறதே… பா.ம.க., ஏதாவது கோரிக்கை வைத்துள்ளதா?” என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அவர் சிரித்தபடியே, “வைக்கலாம் போல் இருக்கிறதே. நீங்கள் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க” எனக் கூறினார்.

இந்த பதிலுக்கு, செய்தியாளர்கள் ‘யாரிடம் சிபாரிசு செய்ய வேண்டும்?’ என கேள்வி கேட்டதற்கு, ராமதாஸ், “ரகசியமாக சொல்கிறேன். ஆனால், தி.மு.க.,விடம் கேட்க மாட்டோம்” என்றார்.
மேலும், ராமதாஸ் தமிழர்களின் தொன்மை கால நாகரிகம் தொடர்பான புத்தகத்தை தர்மேந்திர பிரதானுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி, அந்த புத்தகங்களை படித்து, “நான் சொன்னது தவறு என்று அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்றார். அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
தமிழகத்தில் நெல்லுக்கு குவிண்டால் ரூ.3,450 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். அதன்படி, மகளிர் உரிமை தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கதாகக் கூறினார். மேலும், தமிழக அரசு காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.