சென்னை: திருவள்ளூர்-காஞ்சிபுரம், கோவை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் அதிக புரதச்சத்தும், வைட்டமின் ஏ, டி சத்தும் நிறைந்த புதிய ரக க்ரீன் மேஜிக் பிளஸ் பால் வரும் 18-ம் தேதி முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் கடந்த 12-ம் தேதி அறிவித்திருந்தது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது கிரீன் மேஜிக் பால் விலையை விட லிட்டருக்கு ரூ. 11 ரூபாய் அதிகம். எனவே கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து விளக்கி ஆவின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது, குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடையே, வைட்டமின் ஏ, டி குறைபாடு ஆய்வில் தெரியவந்துள்ளதால், புதிய ரகத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். க்ரீன் மேஜிக் பிளஸ் என்று அழைக்கப்படும் பால், வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட 4.5 சதவீதம் கொழுப்பு மற்றும் 9 சதவீதம் மற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சில்லரை வியாபாரிகளுக்கு சற்றே அதிக கமிஷன் கொடுத்து சில யூனியன்களில் சிறிய அளவில் உற்பத்தி செய்து அதன் சந்தையை கண்காணிக்க உள்ளோம். மேலும், சில்லரை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி., ரூ. 25. அதே சமயம், தற்போது விற்பனை செய்யப்படும் மற்ற வகை பால்களின் அளவு குறைக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.