
சென்னை: தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பெரும்பாலான ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து இன்று தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பகல் நேர விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஃபென்சல் புயலால் பெய்த கனமழையால், விக்கிரவாண்டி-முண்டியம்பாக்கம் ரயில் பாலத்தில் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியது.
இதனால் இந்த பாலம் வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 36 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்ட 20-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627), சென்னை எழும்பூர் – மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் (22671), சென்னை எழும்பூர் – புதுச்சேரி மெமு எக்ஸ்பிரஸ் (06025), சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் (22675), விழுப்புரம் – தாம்பரம் 06028), புதுச்சேரி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16116) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 9.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை – எழும்பூர் – குருவாயூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்குடியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்றிரவு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் (16866), நேற்று இரவு மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் (16180) விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டன.
செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்கள் வழியாக செல்லவில்லை. நேற்று மாலை புறப்பட்ட கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634), நேற்று இரவு புறப்பட்ட மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) ஆகியவை விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டன. செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லவில்லை. இதேபோல், திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்குச் சென்ற நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டன.
நேற்று இரவு புறப்பட்ட காரைக்கால் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16176) விழுப்புரம், காட்பாடி, சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு திருப்பி விடப்பட்டது. நேற்று செங்கோட்டை – தாம்பரம் புறப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) விழுப்புரம், காட்பாடி, எழும்பூர் வழியாக திருப்பி விடப்பட்டது. அதே சமயம் அரக்கோணம் மற்றும் பெரம்பூரில் நின்று செல்ல சிறப்பு நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.
நேற்று மதியம் புறப்பட்ட காக்கிநாடா – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (17655) மற்றும் நேற்று மாலை புறப்பட்ட காச்சிகுடா – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை இயக்கப்படும். தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 13 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பி விடப்பட்டன. 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வழியில் 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனிடையே, மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.